img
img

அஸிலாவின் பரபரப்பு வாக்குமூலம்: உடனடி விசாரணையில் இறங்குக
வெள்ளி 20 டிசம்பர் 2019 13:38:48

img

அல்தான்துயா கொலையாளி அஸிலா ஹட்ரி வெளியிட்டுள்ள சத்தியப்பிரமாண வாக்குமூலம் தொடர்பாக புதிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென மலேசிய வழக்கறிஞர் மன்றமும் நேற்று கேட்டுக்கொண்டது.

அவர் வெளியிட்டுள்ள இந்த அதிரடியான குற்றச்சாட்டுக்கள் அதிர்ச்சியளிப்பது மட்டுமல்ல. அதில்  சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றவர்களின் தகவல்களும் பேரதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

மேலும் இதில் மலேசிய நீதித்  துறையின் மீதான மதிப்பீடும் சம்பந்தப்பட்டிருப்பதால் உடனடியாக இந்த  விசாரணை தொடங்கபட வேண்டும் என அந்த மன்றத்தின் தலைவர் அப்துல் ஃபாரிட் அப்துல் காபூர்  கூறினார்.

இந்த சம்பவம் முழுவதிலும் நிறைய மர்மங்கள் இருப்பது போலத் தெரிகிறது.  பெரும்பாலும் ஒரு குற்றவியல் புலன் விசாரணைக்கு காலக்கெடு ஏதுமில்லை. இந்த விஷயத்தில் உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும்.

இதில் இனியும் மூடிமறைப்பு வேலைகள் நடக்கக்கூடாது. ஆதாரங்களை மறைக்கின்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது  என்றார் அவர். இந்தக் கொடூரமான குற்றம் தொடர்பில் எல்லாத் தகவல்களும் தீர ஆராயப்பட வேண்டும்.

நீதிமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்பட வேண்டும். கேள்விகளும் சந்தேகங்களும் எழக்கூடாது. சந்தேகத்திற்கு இடமில்லாமல் இந்தக் கொலைக்குத் தகுந்த தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img