img
img

சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கு தற்காலிக பெர்மிட் - அரசாங்கம் அனுமதி
புதன் 18 ஜனவரி 2017 10:11:57

img

கோலாலம்பூர், ஜன. 18- நாட்டில் சட்டவிரோதமாக வேலை செய்து வரும் அந்நியத் தொழிலாளர்களுக்கு தற்காலிக வேலை பெர்மிட்டை வழங்குவதற்கு அரசாங்கம் நேற்று இணக்கம் தெரிவித்துள்ளது. தங்களிடம் பணியாற்றி வரும் சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கு இந்த தற்காலிக வேலை பெர்மிட்டை பெற்று தருவது மூலம் அவர்களை முதலாளிமார்கள் தொடர்ந்து வேலைக்கு அமர்த்திக்கொள்ள முடியும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். தொழிலாளர்கள் பற்றாக்குறையினால் தங்களின் தொழிலும் செயலாக்கமும் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு முதலாளிமார்களுக்கு இத்தகைய வாய்ப்பை அரசாங்கம் வழங்கியிருப்பதாக உள்துறை அமைச்சருமான ஜாஹிட் தெரிவித்தார். எனினும் அரசாங்கத்திடமிருந்து தற்காலிக வேலை பெர்மிட்டை பெற்று தொடர்ந்து வேலையில் அமர்த்தப்படும் அந்நியத் தொழிலாளர்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவர் என்று அவர் சொன்னார். சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கான இந்த தற்காலிக வேலை பெர்மிட்டை குடிநுழைவுத்துறை வெளியிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்நியத் தொழிலாளர்களுக்கு வழக்கம் போல் செலுத்தப்படும் லெவி கட்டணத்தைப் போன்று இத்தகைய தொழிலாளர்களுக்கும் முதலாளிமார்கள் லெவி கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார். நடைமுறை சிக்கல்களை சட்டத்துறை அலுவலகம் தீர்த்தவுடனே சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கான இந்த தற்காலிக வேலை பெர்மிட்டை வெளியிடப்படுவது துவங்கப்படும் என்று துணைப்பிரதமர் தெரிவித்தார். நேற்று அந்நியத் தொழிலாளர்கள் மற்றும் சட்டவிரோதத் தொழிலாளர்களுக்கான அமைச்சரவை குழுக் கூட்டத்திற்கு தலைமையேற்றப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். தவிர தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள நான்கு துறைகளில் அந்நியத் தொழிலாளர்கள் எடுக்கப்படுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் துணைப்பிரதமர் தெரிவித்தார். பண்ணைத் தொழில் (Poultry Farming) , சுரங்க- கல்லுடைப்புத்துறை (Mining - Quarrying) , சரக்குகளை கையாளுதல் ( Cargo Handling) மற்றும் விருந்தோம்பல் - சுற்றுலாத்துறை ( Hospitality - Tourism) ஆகியவையே அந்த நான்கு துறைகளாகும். இந்த நான்கு துறைகளிலும் தொழிலாளர் பற்றாக்குறை கடுமையாக இருப்பதை நாங்கள் உணர்ந்து இருப்பதால் அத்துறைகளில் அந்நியத் தொழிலாளர்களை எடுப்பதற்கு அனுமதி அளித்துள்ளோம் என்றார் துணைப்பிரதமர். எனினும் பண்ணைத் தொழில் , சுரங்க- கல்லுடைப்புத்துறை , சரக்குகளை கையாளுதல் மற்றும் விருந்தோம்பல் - சுற்றுலாத்துறை ஆகிய நான்கு துறைகளில் அந்நியத் தொழிலாளர்களை எடுப்பதற்கு வரும் 2020 ஆம் ஆண்டு வரையில் மட்டுமே அனுமதி என்று அவர் சொன்னார். * லெவி கட்டணத்தை முதலாளிமார்களே ஏற்க வேண்டும் * 4 துறைகளுக்கு அந்நியத் தொழிலாளர்களை எடுக்க அனுமதி * தொழிலாளர் பற்றாக்குறையினால் தொழில்கள் முடங்கக்கூடாது * தற்காலிக வேலை பெர்மிட்டை பெறும் தொழிலாளர்கள் கண்காணிக்கப்படுவர்

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img