வஞ்சிக்கப்பட்ட அனைத்து மலேசிய ஏழை இந்தியர்களின் சார்பில் ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி தலைமையிலான வழக்குரைஞர்கள் குழு பிரிட்டீஷ் அரசிக்கு எதிரான வழக்கை நேற்று லண்டன் உயர்நீதிமன்றத்தின் குயின்ஸ் பெஞ்ச் பிரிவில் பதிவு செய்துள்ளது. இது தொடர்பான தகவல்களை ஹிண்ட்ராப் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஙி.சாம்புலிங்கம் இன்று வெளியிட்ட செய்தி அரிக்கையில் தெரிவித்துள்ளார். உலகின் நிலப்பரப்பில் கால் பகுதியை ஒரு காலத்தில் ஆண்ட பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் தவறுகளுக்கு அது பொறுப்பேற்க வேண்டும் என்ற ஒரு குறிக்கோளுடன் இப்படி ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் தடவையாகும் என்று அவர் கூறினார். பிரிட்டீஷாரின் சட்டம் மற்றும் தார்மீக பொறுப்புகள் மீது இவ்வழக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்றார். நிகழ்கால சட்ட அவலங்களை மாற்றியமைக்கும் வழக்குகளில் சாதனைகள் நிகழ்த்தி லண்டனின் மிக பிரபல்யமாக திகழும் மனித உரிமை வழகுரைஞர் திரு. இம்ரான் கான் நிறுவனம் இவ்வழக்கை கையாள்வது மேலும் ஒரு சிறப்பம்சமாக திகழ்கிறது என்று சாம்புலிங்கம் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்தா
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்