img
img

இலங்கையில் பதற்றம் ஐ.நா  கவலை 
புதன் 26 ஜூன் 2019 14:02:06

img

கொழும்பு, 

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கு முன்  நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல்களை அடுத்து அங்கு பதற்ற நிலை அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாக உள்ளது என  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 41ஆவது கூட்டத்தொடரில் தொடக்க உரை நிகழ்த்திய போது அவர் இவ்வாறு கூறினார். 

மனித உரிமைகள் விஷயத்தில் இலங்கை அதிபருக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில்,  ஒருங்கிணைந்த அணுகுமுறை இல்லாமை, அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்வதில் பாதுகாப்புப் படைகளின் செயல்திறனில்  தாக்கத்தை ஏற்படுத்துகிறது.தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைக்கான ஆரம்ப எச்சரிக்கையாக இது கருதப்பட வேண்டும். சில தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகள் தேவை என்றாலும், அவசரகால நிலை குறைந்தபட்ச காலமாக இருக்க வேண்டும். 

அனைத்து வகையான வன்முறை மற்றும் பாகுபாடுகளின் மூல காரணங்களை கண்டறிந்து, நிவர்த்தி செய்வதற்கு அரசியல், மத மற்றும் பிற சமூகத் தலைவர்களை ஒன்றிணைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img