img
img

விசாரணையிலிருந்து சுப்ரா தப்பிக்க முடியாது - சட்ட நிபுணர்கள் வாதம்
வியாழன் 12 ஜனவரி 2017 12:18:01

img

கோலாலம்பூர், ஜன. 12- மஇகா தேசியத் தலைவர் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ பழனிவேலை கவிழ்ப்பதற்கு சங்கங்களின் பதிவு அலுவலகத்துடன் கூட்டுச்சதி செய்ததாக டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் மற்றும் இதர எழுவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், அந்த வழக்கை மறுபடியும் புதிய நீதிபதி ஒருவரை கொண்டு முழுமையாக மறு விசாரணை செய்யப்பட வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தடால் அடியாக தீர்ப்பு வழங்கியிருப்பது டாக்டர் சுப்பிரமணியத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்று சட்ட நிபுணர்கள் வாதிடுகின்றனர். இந்த முழு விசாரணையிலிருந்து டாக்டர் சுப்பிரமணியமோ அல்லது இதர எழுவரோ ஒரு போதும் தப்பித்து ஓட முடியாது. காரணம், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு மிகத் தெளிவாக உள்ளது என்று சட்ட நிபுணரும் முன்னாள் வழக்கறிஞர் மன்றத்தின் தலைவருமான ரகுநாத் கேசவன் தெரிவித்தார். பழனிவேலை தலைவர் பதவியிலிருந்து கவிழ்ப்பதற்குகூட்டுச் சதி நடந்து இருப்பதாக போதுமான ஆதாரங்களை பழனிவேலின் ஆதரவாளர்கள் முன்வைத்த போதும், அதனை விசாரணை செய்யாமல், சாட்சிகளை அழைக்காமல் வழக்கை தள்ளுபடி செய்து இருப்பதன் மூலம் உயர்நீதிமன்ற நீதிபதி மிகப்பெரிய தவற்றை செய்து இருப்பதாக மூவர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தலைமையேற்ற நீதிபதி டத்தோ தெங்கு மைமுன் பின்தி துவான் மாட் நேற்று முன்தினம் தனது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இது உண்மையிலேயே பழனிவேலின் ஆதரவாளர்களுக்கு கிடைத்த தார்மீக வெற்றியாகும். பழனிவேலிடமிருந்து தலைவர் பதவியை பறித்ததை கண்டித்து தங்களுக்கு நீதிவேண்டும் என்று கடந்த ஓராண்டு காலமாக சட்டப் போரட்டத்தை நடத்தி வந்த பழனி ஆதரவாளர்களுக்கு இது புத்துணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ‘ இந்த வழக்கை மறுபடியும் விசாரணை செய்ய வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் முடிவு செய்து இருப்பதால் இந்த வழக்கில் பிரதிவாதிகளான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் மற்றும் இதர ஏழு பேர் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோர முடியாது’ என்றார் ரகுநாத் கேசவன். பொதுவாக ஒரு வழக்கை மறுபடியும் விசாரணை செய்ய வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில் அந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து சாட்சிகளும் அழைக்கப்பட வேண்டும், ஆதாரப் பொருட்கள் அனைத்தும் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும். இதுதான் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் சாரம்சமாகும் என்றார் ரகுநாத் கேசவன். * கூட்டரசு நீதிமன்றத்தில் சுப்பிரமணியம் வெற்றி பெறுவது என்பது எளிதானது அல்ல * பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வழக்கை இழுத்தடிக்க முயற்சிக்கலாம் * அரசாங்க ஏஜென்சியும் சம்பந்தப்பட்டுள்ளதால் தலைவலி மேலும் அதிகரிக்கலாம் * சாட்சிக்கூண்டு ஒன்றே கூட்டுச்சதி குற்றச்சாட்டுக்கு வெளிச்சம் தர முடியும்

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img