கம்போங் பெராயா லாமாவிற்கு அருகிலுள்ள ஜாலான் பெசிசீர் பந்தாயில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஆடவர் உயிரிழந்தார். நேற்று முன்தினம் காலை 8.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் புரோடுவா மைவி ரக காரின் ஓட்டுநரான சொங் புய் சிங் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காலை 8.55 மணியளவில் அங்கு விரைந்ததாக மீரி மாவட்ட தீயணைப்புப் படைத் தலைவர் லாவ் போ கியோங் தெரிவித்தார். அங்கு சென்று பார்க்கையில் கார் ஓட்டுநர் ஒருவர் காரின் இடுக்குகளில் மாட்டி உயிரிழந்து கிடந்தார். மற்றொரு காரான புரோட்டோன் சாகா ரக காரில் பயணித்தவர்கள் காயங்களுக்கு ஆளாகியிருந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்