தொழில் துறைகளின் தேவையை நிறைவு செய்யும் வகையில் உள்நாட்டுத் தொழிலாளர்களை உருவாக்கு வதற்கு தொழில் நுட்ப தொழிற் கல்வி பயிற்சிக்கு (டிவிஇடி) அரசாங்கம் வெ.460 கோடியை ஒதுக்கியுள்ளது. அரசாங்கத்தின் சொத்துக்களை மேம்படுத்தும் வகையில் தேசிய நீலப் பெருங்கடல் வியூகத்தின் மூலம் பயன்படுத்தப்படாமல் உள்ள ஒன்பது ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் பாலி டெக்னிக்குகளாகவும் தொழிற்கல்வி கல்லூரிகளாகவும் உருமாற்றப்படும். இந்த ஆக்கப்பூர்வ முயற்சியின் மூலம் புதிய பாலி டெக்னிக்குகளை (தொழில் நுணுக்க நிறுவனம்) நிறுவு வதற்கான செலவுத் தொகை குறையும். அதன் மூலம் அரசாங்கம் ஏறக்குறைய வெ. 200 கோடியை சேமிக்க முடியும். இதையடுத்து தொழில்நுட்ப தொழிற் கல்வி, பயிற்சிக்கான கல்வி உபகரணங்களை தாம் உயர்த்தும் வகையில் வெ.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதைப் போல திறன் மேம்பாட்டு நிதிக் கழகத்திற்கு வெ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தக் கூடிய வகையில் அவர்களின் திறனை மேம்படுத்த ஜிஎல்சிக்களின் மூலமாக மலேசியப் பயிற்சித் திட்ட (எஸ்எல்1எம்) செயல் முறையை 2017இல் 20,000 பட்டதாரிகளுக்கு விரிவுபடுத்த வெ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2016இல் அம்மாணவர் எண்ணிக்கை 15,000 ஆக இருந்தது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்