கோலாலம்பூர்,
புதிய 2019-ஆம் ஆண்டு, அனைத்து மலேசியர்களுக்கும் மிகப்பெரிய வெற்றிகளைக் கொடுக்கக்கூடிய அர்த்தமுள்ள ஆண்டாக அமைய வேண்டும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 2018-இல் மிகவும் கடுமையான சவால்களை மலே சியர்கள் சந்தித்துள்ளனர். இந்த ஆண்டில் வரையப்பட்ட அனைத்து தீர்மானங்களும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன என்றே நம்புகிறேன்.
நமது வெற்றிகளும் அதே சமயம், தோல்விகளும் நமக்கெல்லாம் வாழ்க்கைப் பாடங்களாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். பிறக்கும் இந்த புத்தாண்டு நம் அனைவருக்கும் அர்த்தமுள்ள ஒன்றாக இருப்பதுடன், மேலும் பல வெற்றிக்கு நம்மை ஊக்குவிக்கும் என நம்புவோம் என தமது டுவிட்டர் அகப்பக்கத்தில் வெளியிட்டுள்ள சிறிய காணொளி பதிவேற்றத்தில் மகாதீர் கூறியுள்ளார்.தமது மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலி சார்பாகவும் மகாதீர் அனைத்து மலேசியர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துக்கொண்டார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்