செவ்வாய் 16, ஏப்ரல் 2024  
img
img

நம் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கே அனுப்புவோம். தம் 3 வாரிசுகளையும் தமிழ்ப்பள்ளிக்கே அனுப்பி வைத்த பெற்றோர். 
திங்கள் 24 டிசம்பர் 2018 18:33:43

img

“தமிழ் படித்து சாக வேண்டும்; என் சாம்பலிலும் தமிழ் மணம் வீச வேண்டும்”  எனும்  சிந்தனை நமது சமூகத்தி டமிருந்து விடுபட்டு  வருவதாகவே உணர  முடிகின்றது. கணிதமும் அறிவியலும்  ஆங்கிலத்தில் போதிக்கும் திட்டத்தால் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை  வெகுவாக  உயர்வு கண்டு  2009 -இல் சுமார் 110,000  மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் பயின்று வந்தனர். 

எனினும், 2018-இல் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 80,000 மட்டுமே. இரட்டை மொழித் திட்டத்தை (டி.எல்.பி.) தமிழ்ப்பள்ளிகளுக்கு சாதகமாக அமைய விடாமல் தடுக்கும் இயக்கத்தால் மாணவர்க ளின் எண்ணிக்கை மேலும்   சரிவடையும் என்பதை மறுக்க முடியாது. 

தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி அடைவு நிலைக்கு எவ்விதமான  எதிர்மறைத் தாக்கமும் இல்லை என்பதை  உணர்வுப்பூர்வமாகக் கூறுகின்றனர் ஜொகூர், பாசீர் கூடாங்  பகுதியில்  வசித்து வரும் சுப்ரம ணியம் பழனிச்சாமி -  தமிழ்ச் செல்வி ஆறுமுகம்  தம்பதியர். 

சுப்பிரமணியம் பழனிசாமி லாயாங்-லாயாங் புக்கிட் பாடாக் தோட்டத்தைப்  பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ்ச்செல்வி ஆறுமுகம் உலுத்திராம், கிம் லோங் தோட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தங்களின் கல்விப் பின்னணியே  தங்கள் மூன்று  வாரிசுகளையும் தமிழ்ப்பள்ளிக்கே அனுப்பும் முடிவினை   ஏற்படுத்தி யதாகக் கூறுகின்றனர் முன்னாள் ஆசிரியர்களான இத்தம்பதியர்.

இவர்களின் மூத்த வாரிசு திவ்யா   சுப்பிரமணியம், ஜொகூர், மாசாய்  தமிழ்ப்பள்ளியில் முதலாம்  ஆண்டு கல்வியைத் தொடங்கினார். பிறகு, படிவம் ஒன்று முதல் உயர்கல்வி வரை  பொந்தியான் மாரா இளநிலை அறி வியல்   கல்லூரியில் (MRSM, Pontian)  படிப்பை முடித்து, ஈப்போ குவெஸ்ட் அனைத்துலக பல்கலைக்க ழகத்தில் (Quest University)  மருத்துவத் துறையில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது  திவ்யா   சுப்ரமணியம்  சுல்தான் இஸ்மாயில்  மருத்துவமனையில்  பணியாற்றி வருகிறார். 

இரண்டாவது வாரிசு விக்னேஸ்வரன் சுப்ரமணியம், பாசீர்  கூடாங் தமிழ்ப்பள்ளியில்  ஆரம்பக் கல்வியைத் தொடங்கி, எஸ்.பி.எம். தேர்விற்குப் பின்னர் வாகனத்துறையில் உயர்கல்வி  பெற்றுள்ளார். 

இவர்களின்  மூன்றாவது  வாரிசு சங்கீதா சுப்ரமணியம். இவர் பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளியில் பயின்று, நூசா டாமாய்   இடைநிலைப்பள்ளியில்  கல்வியை  முடித்து,  தற்போது ஏய்ம்ஸ்ட்  பல்கலைக்கழகத்தில்  (AIMST University) மருத்துவத்துறையில்  பயின்று வருகிறார். 

தந்தை சுப்ரமணியம் பழனிச்சாமி வர்த்தகத் துறையில் ஈடுபட்டு வருவதோடு சமூக நடவடிக்கைகளிலும் பங்கெடுத்து வரும் நிலையில், தமிழ்ப்பள்ளிகளில் கல்வியைத் தொடங்கியதால்தான் தனது  பிள்ளைகள் கல்வி அடைவு நிலையில் சாதனை படைத்துள்ளதாக  பெருமையாகக் கூறுகிறார். 

வாழ்வியல் தேவைகளுக்கு ஏற்ற மாற்றங்களை தமிழ்ப்பள்ளிகள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் பள்ளிகள் மட்டுமே பெயரளவில் எஞ்சியிருக்கும் என்பதைப் போராடுகின்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img