img
img

ஜி.எஸ்.டி. வரி, 8 விழுக்காடாக உயர்த்தப்படுமா?
வியாழன் 20 அக்டோபர் 2016 08:55:51

img

நாளை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 2017 பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி. எனப்படும் பொருள், சேவை வரி மேலும் 2 விழுக்காடு உயர்த்தப்படும் என்று கூறப்பட்டு வருகிறது. தற்போது 6 விழுக்காடாக இருந்து வரும் ஜி.எஸ்.டி. வரி, 8 விழுக்காடாக உயர்த்தப்படும் என்று கூறப்படும் வேளையில் அது வெறும் வதந்தியே என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஜொஹாரி அப்துல் கனி நேற்று தெரிவித்துள்ளார். உண்மையிலே அத்தகைய உயர்வு எதுவும் இல்லை. அரசாங்கம் ஜி.எஸ்.டி. வரியை மேலும் 2 விழுக்காடாக உயர்த்தப் போவதாக யாரோ கிளப்பிவிட்டுள்ள வதந்தியாக அது இருக்கலாம் என்று அவர் சொன்னார். நேற்று இங்கு 2016 ஏழாவது உலக முஸ்லிம் வர்த்தக கண்காட்சியை தொடக்கி வைத்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஜொஹாரி மேற்கண்டவாறு கூறினார். ஜி.எஸ்.டி. வரி கடந்த 2015 ஏப்ரல் முதல் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட 6 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரிதான் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img