img
img

தனது பிள்ளைகளைத்  தமிழ்ப்பள்ளியில் கல்வி கற்கவைத்து மேம்படுத்திய தமிழ்ப்பள்ளி பூவரசி நடராஜன்
திங்கள் 17 டிசம்பர் 2018 12:30:25

img

“தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” எனப் பாடி பரவசம் ஊட்டியவர் பாவேந்தர் பாரதிதாசன். தமிழ்மொ ழியை அமுதாகவும் உயிராகவும் மதித்த நமது சமூகம் வாழ்வியல் தேடல்களுக்

காக தமிழ்மொழியையே இழக்க நினைப்பதை வேதனையான விவகாரமாகவே கருத வேண்டியுள்ளது. தேசியப் பள்ளிகளில் சுமார் 70,000 மாணவர்கள், சீனப்பள்ளிகளில் ஏறக்குறைய 13,000 மாணவர்கள் என்பதை ஒட்டுமொத்த இந்திய சமூகமும் சிந்திக்க வேண்டிய விவகாரமாக உணர வேண்டும்.

திருமண வாழ்வில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை உள்வாங்கிக் கொண்டு தனது அன்புத் தாயான இராமாயி   இராஜாங்கம் துணையுடன் தனித்து நின்று எல்லா வகையான சவால்களையும் எதிர்கொண்டு தமிழ்ப்பள்ளிகளில் ஆரம்பக் கல்வியைக் கற்று தனது மூன்று பெண் செல்வங்களையும் கரை சேர்த்திருக்கும் பெருமைக்குரிய தாயாகத் திகழ்கிறார் பூவரசி நடராஜன்.

தமிழ்ப்பள்ளி ஆசிரியையான பூவரசி நடராஜன் தற்போது எமரால்டு தமிழ்ப்பள்ளியில் பணியாற்றி வரும் நிலையில் எவ்விதமான சலனமும் இல்லாமல் தனது பிள்ளைகள் தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்க எடுத்த முடிவு இனிமையான பலன்களைக் கொடுத்துள்ளதாகக் கூறுகின்றார்.  பூவரசி நடராஜனின் மூத்த புதல்வி காயத்ரி கிருஷ்ணசாமி நாட்டின் தலைசிறந்த பள்ளிகளின் ஒன்றான சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்கி இடைநிலைக் கல்விக்குப் பின்னர் ஆசியான் மெட்ரோபோலிட்டன் பல்கலைக்கழகத்தில் (Asean Metropolitan University) மருத்துவத் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.

பூவரசி நடராஜனின் இரண்டாவது வாரிசு தர்ஷினி கிருஷ்ணசாமி சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் (SJKT Simpang Lima) கல்வியைத் தொடங்கி உயர்கல்வியை மலாக்கா மெட்ரிகுலேசன் கல்லூரியில் முடித்து விட்டு மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகத்தில் (Universiti Perlis Malaysia - Unimep) அனைத்துலக வணிகத் துறையில் இளங்கலை பட்டம்பெற்றுள்ளார்.

தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடர்ந்ததால் வலுவான குடும்ப உறவுகளை ஏற்படுத்துவதற்கான பண்பு நலன்களைத் தனது மூன்று பெண் பிள்ளை களும் பெற்றுள்ளதாகக் கூறும் பூவரசி நடராஜனின் மூன்றாவது வாரிசு லக்ஷ்ரிணி கிருஷ்ணசாமி, சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்கி தற்போது சன்வே அனைத்துலகக் கல்லூரியில் (Sunway College) பட்டயக் கணக்காளர் துறையில் பயின்று வருகின்றார்.

தமிழ்ப்பள்ளியில் கற்பதன் வழி நல்ல பண்புகளையும் வாழ்வியலுக்குத் தேவையான மனப்பாங்கையும் பெற்று விடும் நிலையில் வாழ்வியல் சவால்க ளைச் சமாளிக்கும் திறன்கள் தானாகவே வந்து விடும் என உறுதியாகக் கூறுகின்றார் பூவரசி நடராஜன். தற்போதைய பெற்றோர்கள் தமிழ்ப்பள்ளிகளைத் தவிர்க்கும் காரணங்களைக் கண்டறிந்து நிவர்த்திக்கும் வழிவகைகளை ஆராய்ந்து தீர்வுகள் காணப்பட்டால் பிற பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்பதே பொதுவான கருத்தாகும். (-கே.ஜே)

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img