தீபாவளி திருநாள் கொண்டாடப்படுவதற்கு இன்னும் சில தினங்களே எஞ்சியிருக்கும் வேளையில் பலதரப்பட்ட சமையல் எண்ணெய் விலை ஏற்றம் காணவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அடுத்த மாதத்தில் சமையல் எண்ணெய் விலை உயரலாம் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. சமையல் எண்ணெய்க்கு அரசாங்கம் வழங்கி வந்த உதவித் தொகை அகற்றப்பட்டதால் இந்த விலையேற்றத்திற்கான காரணமாகும். அதே வேளையில் சமையல் எண்ணெய் விலை ஏற்றம் காணவிருப்பதை மலாயா சமையல் எண்ணெய் உற்பத்தி யாளர்கள் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. கலப்பு எண்ணெயில் தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் 500 கிராம், 1 கிலோ கிராம்,2 கிலோ கிராம், 3 கிலோ கிராம்,5கிலோ கிராம் மற்றும் சுத்தமான செம்பனை எண்ணெயில் தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் 500 கிராம், 1 கிலோ கிராம்,2 கிலோ கிராம், 3 கிலோ கிராம் ஆகியவை ஏற்றம் காணவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெ. 2.50 காசுக்கு விற்கப்படும் பாக்கெட்டில் உள்ள சமையல் எண்ணெய் வெ. 2.90 காசுக்கு உயர்வு காணவிருக்கிறது. இது அடுத்த மாதம் விற்கப்படும் புதிய விலையாகும். வெ. 13.35 காசுக்கு விற்கப்படும் 5 கிலோ கிராம் எடை கொண்ட ஒரு போத்தல் சமையல் எண்ணெய், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வெ. 15.25 காசுக்கு விற்பனை செய்யப்படும். சமையல் எண்ணெய் உயர்வு குறித்து நாளை வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2017 பட்ஜெட்டில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2017 பட்ஜெட் அறிவிக்கப்படும் வரையில் நிறைய வியாபாரிகள் இப்போது முதல் கொண்டு சமையல் எண்ணெயை பதுக்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்