தஞ்சோங் காராங், கம்போங் சுங்கை யூ இந்திய விவசாயி களின் வீட்டுமனைத் திட்டத் தில் செம்பனை பயிரிட்டுள்ள நபர் ஒருவருக்கெதிராக கோல சிலாங்கூர் மாவட்ட காவல் நிலைய தலைமை யகத்தில் புகார் செய்யப் பட்டது. கடந்த ஓராண்டிற்கு முன்னர் அந்த நபர் தன்னுடைய சுய விருப்பத்தின் பேரில் சட்ட விரோதமாக அந்நிலப் பகு தியை ஆக்கிரமித்துக் கொண் டுள்ளதாக அங்குள்ள இந்திய விவசாயிகள் சிலர் முறையிட்டனர். சம் பந்தப்பட்ட நிலத்தில் இதற்கு முன்னர் அமைந்திருந்த விளையாட்டு மைதானத்தில் அந்த நபர் ஓராண்டிற்கு முன்னர் செம் பனை கன்றுகள் பயிரிட்டதாகவும் அந்நபரின் இந்த அத்துமீறலை கோலசிலாங்கூர் மாவட்ட நில அலுவலகம் கண்டிக்காதது ஏன் என்று அந்த இந்திய விவசாயிகள் கேள்வி எழுப்பினர். கம்போங் சுங்கையூ இந்தியர் விவசாய பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் முனியாண்டி குடியேற்றவாசிகள் சார்பாக அந்நபருக்கு எதிராக புகாரை செய்தார். அந்நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட நில அலுவலகத்திடம் கடிதம் வழங்கப்படும் என்று அப்புகாரில் புருஷோத்தமன் முனியாண்டி குறிப்பிட்டார். கம்போங் சுங்கையூ, ஜாலான் கம்போங் இந்தியாவில் சம்பந்தப்பட்ட விளையாட்டு மைதானம் அந்நபரால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக சிலாங்கூர் மாநில மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் முறையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட விளையாட்டு மைதானத்தின் சுய விருப்பத்தின் பேரில் செம்பனைப் பயிரீடு செய்துள்ள அந்நபருக்கு மாவட்ட நில அலுவலகம் அனுமதி அளித்ததா? அல்லது அந்நபர் சட்டவிரோதமாக இந்த நடவடிக் கையில் ஈடுபட்டாரா என்பதை மாவட்ட நில அலுவலகம் தெளிவுபடுத்த வேண்டும் என்று அந்த இந்திய விவ சாயிகள் கோரிக்கை விடுத்தனர். அரசாங்கத்தால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனைக்கான நிலத்தை ஏற்கெனவே ஒருநபர் பராமரித்து பாதுகாப்பதாகக் கூறி சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இத னால் மேற்பட்டத் திட்டத்தில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் அத்தனி நபர்களின் நட வடிக்கைகளினால் ஒவ்வொன்றாக பறிபோய்க் கொண்டிருப்பதாக அவர்கள் மேலும் விவரித்தனர். சிலாங்கூர் மாநில மந்திரி புசாரும் மாநில நிலக்குழுவின் தலைவருமான டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியிடமும் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்