கெலேபாங்கில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லத்தை மூடுமாறு மலாக்கா அரசு பணித்துள்ளது. அந்த இல்லத்தின் பராமரிப்பாளர், ஒரு மூதாட்டியை அடிப்பதைக் காண்பிக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வந்ததை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐந்து நாளில் அந்த இல்லத்தை மூடிவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பதாக மாநில மகளிர், குடும்ப மேம்பாட்டுக் குழுத் தலைவர் லத்திபா ஒமார் கூறினார். காணொளி மட்டுமல்லாமல் அது ஒரு பதிவு செய்யப்படாத இல்லம் என்பதும் அது மூடப்படுவதற்கான காரணமாகும் என்று லத்திபா சொன்னார். மலாக்காவில் 73 பதிவு செய்யப்பட்ட பராமரிப்பு இல்லங்கள் உள்ளன. 20க்கும் குறைவானவை இன்னும் சமுக நலத்துறையில் பதிந்து கொள்ளாமலிருக்கின்றன. இந்த முதியோர் இல்லத்துக்கு 2015 ஆம ஆண்டிலேயே பதிவு செய்து கொள்ளுமாறு ஆலோசனை கூறப்பட்டது. ஆனால், அது இன்னும் அதைச் செய்யாமலிருக்கிறது என்றார். 10 விநாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளியில் வயதான மூதாட்டி ஒருவர், அந்த முதியோர் இல்லத்தை நடத்தி வரும் நபரால் கடுமையாக தாக்கப்படுவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த மூதாட்டி வலி தாங்க முடியாமல் கதறுவதையும் அது சித்தரிக்கிறது. இதன் தொடர்பில் மலாக்க, பத்தாங் தீகா போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் முதல் தேதியிலிருந்து தாம் அந்த முதியோர் இல்லத்தில் வேலை செய்வதிலிந்து நிறுத்திக்கொண்டதாகவும் அந்த இல்லத்தை நடத்தி வருகின்ற நபரின் கொடுமை தாங்க முடியவில்லை என்றும் தன்னை மட்டுமின்றிஅந்த இல்லத்தில் தங்கியிருப்பவர்களையும் அவர் கண்மூடித்தனமாக தாக்கி வருவதாகவும் அந்த மூதாட்டி தனது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்