img
img

சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா  
திங்கள் 14 மே 2018 13:52:21

img

(எம்.கே.வள்ளுவன்) கூலாய், 

கடந்த ஆண்டு  ஆசிரியர் துறையில் சிறந்த சேவைக்கான விருதுகளை கூலாய்  மாவட்ட அளவில் வென்ற ஆசிரியர்களில் கூலாய் பெசார் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நான்கு ஆசிரியைகளும் அடங்குவர். முறையே ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி, எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா ஆகிய ஆசிரி யைகள் இந்த விருதுகளை வென்றனர். 

இவ்வாரம் கொண்டாடப்பட  விருக்கும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு சேவையாளர்களுக்கு  இவ்விருதுகள் வழங்கப்பட்டன. தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய் மாவட்ட கல்வி இலாகாவிற்கு நன்றி கூறுவதாக விருது பெற்ற ஆசிரியைகளில் ஒருவரான  தமிழ்ச்செல்வி குறிப்பி ட்டார். சேவை மனப்பான்மையுடன் ஆசிரியர் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கிய பள்ளி தலைமையாசிரியை ம.சரஸ்வதி வாணிக்கு இவ்வேளையில்  நன்றி கூறுவதாகவும் ஆர்.தமிழ்ச்செல்வி தெரிவித்தார். 

கூலாய்  பண்டார் புத்ரா அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் கூலாய் மாவட்ட கல்வி இலாகா அதிகாரி இஷாக் பின் மாஹ்போக் விருதுகளை வழங்கி ஆசி ரியர்களை சிறப்பு செய்தார்.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
எஸ்.டி.பி.எம். தேர்வு:  தேசிய நிலையில் திவ்யா, புவனேஸ் சாதனை.

அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா  

தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி,

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த

மேலும்
img
தமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா

அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்

மேலும்
img
ஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு

சுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img