img
img

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கினார் நரேந்திர மோடி
செவ்வாய் 28 ஏப்ரல் 2015 00:00:00

img
நிலநடுக்கத்தால் இந்தியாவின் வட மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தனது ஒருமாத சம்பளத்தை வழங்கினார். கடந்த சனிக்கிழமை நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.9 ஆகப் பதிவானது. இந்த மோசமான நில நடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், வட மாநிலங்களில் 72 பேர் உயிரிழந்தனர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, பல்வேறு தரப்பில் இருந்தும் நிதியுதவிகள் குவிந்து வருகின்றது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தனது ஒரு மாத சம்பளத்தை, பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு, நன்கொடையாக வழங்கியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏற்கனவே தங்களின் ஒரு மாத ஊதியத்தை, நன்கொடையாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த நில நடுக்கத்திற்கு நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000 ஐ தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img