img
img

தாயும் மகளும் கொலை.
வெள்ளி 30 செப்டம்பர் 2016 18:09:57

img

கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி உலுத்திராம் புத்ரி வங்சாவில் உள்ள வீடொன் றில் தாயையும் மகளையும் கொலை செய்ததாக 20 வயதுடைய இரு இந்திய இளைஞர்கள் மீது நேற்று ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. செப்டம்பர் 21ஆம் தேதியன்று காலை 10.00 மணிக்கும் 11.00 மணிக்கும் இடையில் எம்.மாரியாய் (வயது 56) மற்றும் அவரின் மகள் சி.துர்காதேவி (வயது 17) ஆகியோரை கொடூரமாக கொலை செய்ததாக என்.யுனேஸ்வரன் மற்றும் ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் மீது குற்றவியல் பிரிவு 302இன் கீழ் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் கட்டாய தூக்குத் தண்டனை விதிக்க சட்டம் வகை செய்கின்றது. இந்த இரட்டைக் கொலை தொடர்பில் விசாரணைக்காக தடுக்கப்பட்ட மேலும் அறுவர் இந்த கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரிடமும் வாக்கு மூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அதே வேளை பிணையில் விடுவிக்கவும் அனுமதிக்கப்படவில்லை. மரணமடைந்த இருவரின் சவப்பரிசோதனை அறிக்கையை பெறும் வகையில் இவ்வழக்கை மீண்டும் நவம்பர் முதல் தேதி செவிமெடுக்க மாஜிஸ்திரேட் சலினா ஒமார் தேதியை நிர்ணயித்தார். இவ்வழக்கில் அரசாங்க தரப்பில் துணை பொது பிராசிகியூஷன் அதிகாரியாக நூர் பைடூரி முஸ்தாக்கிம் செயல்பட்ட வேளையில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் வழக்கறிஞர் எவரும் பிரதிநிதிக்கவில்லை. முன்னதாக சம்பவம் நிகழ்ந்த அன்று தாயும் மகளும் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடக்க காணப்பட்டனர். அறையொன்றில் தாயார் படுக்கை மெத்தையிலும் மகள் மெத்தைக்கு அருகில் தரையில் இரத்த வெள்ளத்துடன் இறந்து கிடந்தனர். கொலையுண்ட எம்.மாரியாயியின் இரண்டாவது மகன் எஸ்.பிரபாகரன் (வயது 33) அந்த இரட்டைக் கொலைகளை முதலில் கண்டு போலீசுக்கு தகவல் வழங்கியுள்ளார். மூன்று அறைகள் கொண்ட அந்த வீட்டின் மூன்றாவது அறையில் இருவரும் இறந்து கிடந்தனர். எம்.மாரியாயின் இடது விலா எழும்பு, கழுத்து மற்றும் உடலின் பின் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்த வேளையில் சி.துர்காதேவியின் உடல், கழுத்து மற்றும் வாய்ப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்ததாக முன்னதாக ஜொகூர்பாரு தென் பகுதி போலீஸ் தலைவர் ஏசிபி சுலைமான் சாலே கூறியிருந்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img