img
img

இறந்தவருக்கு இப்படி ஒரு சோதனையா? கண் விழித்துவிட்டு மறுபடியும் இறப்பு
செவ்வாய் 28 ஏப்ரல் 2015 00:00:00

img
இறந்ததாக கருதப்பட்டு கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தவர் திடீரென கண் திறந்தார். பிறகு சில மணி நேரத்தில் இறத்துவிட்டார். புதுவையை அடுத்த வேல்ராம்பட்டு அலங்காபுரி நகரை சேர்ந்தவர் பாரி (54). இவர் தனியார் எண்ணெய் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். ஆனாலும், சரிவர குணமாகாததால், அவரை குடும்பத்தினர் வீட்டுக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்று காலை திடீரென பாரி எந்த அசைவுமின்றி கிடந்துள்ளார். இதனால் அவர் இறந்து விட்டதாக கருதிய குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதுள்ளனர். பின்னர் இறுதி சடங்கிற்கான வேலைகளில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பெட்டிக்குள் வைத்த அரை மணி நேரத்திற்கு பிறகு பாரியின் கை, கால்கள் அசைந்துள்ளன. மேலும், கண்களையும் திறந்து பார்த்துள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் உடனடியாக அவரை, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பாரி இறந்து விட்டார். பிறகு அவரை, இறந்தவருக்கு செய்யும் சடங்குகளுடன் அடக்கம் செய்தனர்.
பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img