13ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆற்றிய உரையின்போது தேச நிந்தனை சொற்களை பயன்படுத்தியதற்காக குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவாவிற்கு மூன்று மாதச் சிறைத் தண்டனையும் 1,800 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டன. ஓராண்டுக்கும் குறைவான சிறைத் தண்டனையும் 2,000 வெள்ளிக்கும் குறைவான அபராதமும் விதிக்கப்பட்டதால், தியான் சுவா தனது நாடாளுமன்ற பதவியை தக்க வைத்துக் கொண்டார். ஓராண்டுக்கும் கூடுதலான சிறைத் தண்டனையும் 2,000 வெள்ளிக்கும் கூடுதலான அபராதமும் விதிக்கப்பட்டிருந்தால் அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்து இருப்பார். பிகேஆர் உதவித் தலைவருமான தியான் சுவாவிற்கு எதிரான குற்றச்சாட்டை அரசாங்கத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து இருப்பதாக செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஸுல்கர்னாயின் ஹசான் தீர்ப்பளித்தார். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் உள்நோக்கத்துடன் தியான் சுவா தேச நிந்தனை வார்த்தைகளைப் பயன்படுத்தி இருப்பதாக அவர் மேலும் கூறினார். சுவா சார்பில் பிகேஆர் வழக்கறிஞர்கள் என்.சுரேந்திரனும் லத்தீபா கோயாவும் ஆஜராகினர். அரசாங்கத் தரப்பில் டிபிபி ஜுலியா இப்ராஹிம் வாதாடினார். தேச நிந்தனைச் சொற்களைப் பயன்படுத்தியதாக 2013 மே 29ஆம் தேதி தேச நிந்தனைச் சட்டத்தின் 4 (1)(6) பிரிவின் கீழ் சுவா குற்றஞ்சாட்டப்பட்டார். 2013 பொதுத் தேர்தல் முடி வடைந்தவுடன் அவர் கோலாலம்பூர் சீனர் அசெம்பிளி ஹாலில் உரையாற்றியபோது இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக கூறப்பட்டது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்