கோலாலம்பூர்,
கனடாவில் வசிக்கும் தமிழ்ச் சிறுவனான நீலக்ஷன் ராஜ்குமார், இங்கு நடைபெற்ற கணித வினாடி வினா போட்டியில், 8 நிமிடங்களில் 200 கணிதக் கேள்விகளுக்கு விடையளித்துச் சாதனை படைத்துள்ளார். கனடாவின் அஜாக்ஸ் (Ajax) நகரிலுள்ள மைக்கல் ஜீன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் படித்து வரும் நீலக்ஷன், இரண்டாம் ஆண்டில் படிக்கும் போதே, பள்ளியில் கற்றுத் தரப்படும் கணிதப் பாடத்தில் திருப்தி கொள்ளாமல் தனியார் கணித வகுப்பில் சேர்ந்து, கணிதப் பயிற்சிகளை மேற்கொண்டார்.
தனியார் கணித வகுப்பில், மிகவும் சிரமமான கணிதப் பயிற்சிகள் தரப்படும். அங்கு ‘கால்குலேட்டர்’ எனப்படும் கணிதக் கருவியை பயன்படுத்த முடியாது. கணிதப் பாடத்தை மனக்கணக்குப் போட்டு செய்யும் பயிற்சி மட்டுமே அங்கு வழங்கப்படுகிறது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 10.2.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்