ஜார்ஜ்டவுன்,
ஆசிரியரின் கைப் பேசியை திருடியதாக குற் றஞ்சாட்டப்பட்டதை தொடர்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவி எம்.வசந்தபிரியா நேற்று அதி காலை 3.30 மணிக்கு நினைவு திரும்பாத நிலையிலேயே மரணமடைந்ததால் அதிர்ச்சியிலும் துயரத்திலும் மூழ்கியிருக்கும் அவரின் குடும்பத்தினர், தங்கள் மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று மன்றாடுகின்றனர்.பதிமூன்று வயதான வசந்தபிரியா செபெராங் ஜெயா மருத்துவமனையில் மரண மடைந்தார். இவரின் மரணத்திற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல் எழுந்துள்ளது.
எங்கள் வசந்தபிரியாவுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எந்த மாணவருக்கும் ஏற்படக்கூடாது. போலீசும் கல்வி அமைச்சும் உடனடியாக இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அம்மாணவியின் மாமா இது பற்றி போலீசில் புகார் செய்தும் ஒரு வாரமாகி விட்டது. ஆனால், இன்னமும் அவர்கள் தரப்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை. அதே சமயம், கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை எதுவும் செய்யவில்லை என்று வசந்தபிரியாவின் குடும்பத்தார் சார்பில் பேசிய மலேசிய தமிழர் குரல் தலைவர் டேவிட் மார்ஷல் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 2.2.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்