பெட்டாலிங் ஜெயா, ஜன. 23-
தைப்பூச கொண்டாட்டத்தின் போது போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்த இருப்பதாக டான் ஸ்ரீ முகமட் ஃபுஸிஹருண் கூறினார். தைப்பூச கொண்டாட்ட த்தை சீர்குலைக்கக்கூடிய அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் தடுக்க நாடுமுழுவதும் அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு நடவ டிக்கைகளை அதிகரிப்பர் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் நேற்று திங்கட்கிழமை ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார். தைப்பூச கொண்டாட்டம் சுமுகமாக நடைபெறுவதை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு வருகையாளர்கள் தங்களுடைய முழு ஒத்துழைப்பை வழங்குவர் என நாங்கள் நம்புகின்றோம் என்று அவர் கூறினார். தைப்பூச கொண்டாட்டத்திற்கு இடையூறு விளைவிக்கக்கூடிய தகவல்கள் ஏதும் தெரிய வருவோர், அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்குச் சென்று தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 23.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்