(சுகுணா முனியாண்டி) நிபோங் திபால்,
இங்கு பிஸ்தாரி அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் கடந்த ஓராண்டு காலமாக நிலவி வந்த மிக மோசமான தூய்மைக்கேட்டை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஒருவர்பின் ஒருவராக டிங்கிக் காய்ச்சலுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க் கப்பட்டு வந்திருப்பதை நேற்று மலேசிய நண்பன் விரி வான செய்தியாக வெளியிட்டு இருந்தது. இந்நிலை யில் நேற்று அப்பகுதியில் அதிரடியாக இறங்கிய செபராங் பிறை நகராண் மைக்கழக ஊழியர்கள், முழு வீச்சில் துப்புரவுப் பணியை தொடங்கினர்.
ஒரு புல்டோசர் மண்வாரி இயந்திரம், ஐந்து லோரிகள், 30 க்கும் மேற்பட்ட நகராண்மைக்கழக ஊழியர்கள் நேற்று காலையில் அந்த அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் இறக்கப்பட்டு, பொது மக்களின் ஒத்துழைப்புடன் துப்பு ரவுப்பணி முழுவீச்சில் தொடங்கியது. அப்பகுதியில் உள்ள காலியான வீடுகளில் வீசப்பட்ட கழிவுப்பொ ருட்கள், பயன்படுத்தப்படாத தளவாடப்பொருட்கள், குப்பைக்கூளங்கள் ஆகியவற்றை அகற்றும் பணியில் நகராண்மைக்க ழக ஊழியர்கள் துரிதமாக ஈடுபட்டனர்.
Read More: Malaysia Nanban News Paper 22.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்