(எம்.கே.வள்ளுவன்) கூலாய்,
இரண்டு வயது இந்திய சிறுவனை கொலை செய்ததாக வேலையில்லாத இந்திய ஆடவர் ஒருவர் மீது நேற்று கூலாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலை குற்றம் சாட்டப்பட்டது. கடந்த ஜனவரி 3 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கும் இரவு 7 மணிக்கும் இடையில் கூலாய் ஜாலான் பேராக் 1, தெமங்கோங் அடுக்கு மாடியில் ஜே.பாவ்ல் எபினேசன் எனும் சிறுவனை கொலை செய்ததாக எம்.மோஸஸ் (வயது 24) என்பவர் மீது குற்றவியல் பிரிவு 302 இன் கீழ் கொலை குற்றம் சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் எம்.மோஸஸ் கட்டாய தூக்குத் தண்டனையை எதிர் நோக்க சட்டம் வகை செய்கிறது. கீழ் நீதிமன்ற உதவி பதி வாளர் முகமட் சலேஹுடின் அப்துல் சானி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட வேளையில், குற்றச்சாட்டு தனக்கு விளங்குவதாக எம். மோஸஸ் தலையை மட்டும் அசைத்தார்.
Read More: Malaysia Nanban News Paper on 20.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்