(ஆர்.குணா) கோலாலம்பூர்
தனது மூத்த மகன் சதீஸ்வரனுக்கு ஏற் பட்ட கொடூர மரணம் காரண மாக தாய் கஸ்தூரி பாய் ஆறாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளார். லெம்பா பந்தாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நூருல், கஸ்தூரிபாய் இல்லத்திற்கு சென்று உடனடியாக உண்மை விவரங்களை கேட்டறிந்தார். இதற்கு முன்பு இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெற்றது குறித்து இவரிடம் எடுத்துரைக் கப்பட்டது. தாய் தனது தவப் புதல்வனை பறிகொடுத்தது படு துயரமான ஒன்று என்று தெரிவித்த நூருல், மற்றத் தரப்பின் அலட்சியப் போக்கு மற்றும் கவனமின்மை இதுபோன்ற துயர சம்பவங் களுக்கு காரணம் என்றார்.
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் பராமரிப்பில் உள்ள அடுக்குமாடி வீடுகளின் பாதுகாப்பு குறித்து கடுமையாக எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது வாகும். விரைவில் நாடாளுமன்றம் கூடவிருக்கிறது. அவையில் இவ்விவகாரம் எழுப்பப்படும். இந்த துயர சம்பவம் குறித்து துல்லியமாக விவரங்கள் விரைவாக சேகரிக்கப்பட்டு மக்களவையின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும். மின் தூக்கிகளுக்கு கீழே பாதுகாப்பு வளையங்கள் பொருத்தப்பட வேண்டும்.
Read More: Malaysia Nanban News Paper on 20.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்