img
img

கிரகண நேரத்தில் ஆலய நடைகள் மூடப்பட வேண்டும்
சனி 20 ஜனவரி 2018 13:51:41

img

(ஆர்.குணா)  கோலாலம்பூர், 

தைப்பூச தினத்தன்று சந்திர கிரகணம் ஏற்படவிருப்பதால் அன்று ஆலயங்களில் கிரகண நேரத்தில் ஆலய நடைகள் மூடப்பட வேண்டுமென இந்து அமைப்புகள் திட்டவட்டமாக தெரிவித்தன.இது குறித்து மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ மோகன் ஷான் கூறுகையில், நம் நாட்டில் காலம் காலமாக கிரகண காலக்கட்டத்தில் ஆலயங்களுக்கு திருக்காப்பு போடப்படுகின்றது. ஆனால், இம்முறை சந்திர கிரகணம் தைப்பூச நாளன்று வருவதால் இது பெரும் விவகாரம் ஆகியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

தைப்பூச நாளில் மாலை மணி 7.48 முதல் இரவு 11.41 மணி வரையில் சந்திர கிரகணம் ஏற்படவிருப்பதாக இந்து பஞ்சாங்கங்கள் கூறுவதால் அந்நேரத்தில் ஆலய நடைகள் மூடப்பட வேண்டும். இந்த காலக்கட்டத்தில் ஆலயத்தில் பூஜைகள் நடந்தாலோ அல்லது பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை செய்தாலோ பல்வேறு பிரச்சினைகள் மனிதர்களுக்கு ஏற்படும் என இந்து ஆகமங்கள் தெரிவிப்பதாக மலேசிய இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலை மையகத்தில் இன்று மலேசியாவிலுள்ள இந்து அமைப்புகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறினார்.

Read More: Malaysia Nanban News paper on 20.1.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img