(ஆர். குணா) கோலாலம்பூர்,
இங்குள்ள 21 மாடிகளை கொண்ட அடுக்குமாடி வீடொன்றிலிருந்து நாற்காலியை தூக்கி எறிந்ததில், 15 வயது மாணவன் சதீஷ் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அப்பகுதியை சேர்ந்த 31 பேரிடம் இதுவரை போலீசார் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர். சிறுவன் சதீஷ் மரண விவகாரம் தொடர்பில் ஐவ ரிடம் மரபணு (டிஎன்ஏ) சோதனை செய்யப்பட்டதுடன் 31 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ்படைத் தலைவர் டத்தோ மஸ்லான் லஷிம் நேற்று கூறினார்.
பந்தாய் டாலாம், ஸ்ரீ பந்தாய் பிபிஆர் 102 வீடமைப்புப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 15 வயதுடைய சதீஷ் த/பெ சத்தியசீலன் அகால மரணம டைந்தான்.மேல் மாடியிலிருந்து இருந்து வீசப்பட்டதாக நம்பப்படும் அலுவலக இரும்பு நாற்காலி தலையில் விழுந்ததால் சதீஷ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தான். அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகள், இரும்பு பொருட்கள் உட்பட பலவற்றை வீசும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
Read More: Malaysia Nanban News Paper on 18.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்