கோலாலம்பூர்,
மலாயாவிற்காக தங்கள் உயிரை கொடுத்து போராடியவர்கள் மலாய்க்காரர்கள் மட்டுமே என்று நலன்காக்கும் அமைப்பின் ( உம்மா) தலைவர் இஸ்மா யில் மினா அகமட் கூறியிருப்பது சரியல்ல என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி தெரிவித்துளளார். நாட்டின் வரலாற்றுப் பேராசிரியர் டான்ஸ்ரீ கூ கை கிம் எழுத்தை மேற்கோள்காட்டிய துணைப்பிரதமர், இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பான்காரர்களை எதிர்த்துப் போராடுவதிலும் அவசரக் காலத்தில் கம்யூனிஸ்ட்காரர்களுக்கு எதிரான போராட்டத்திலும் பல்லின மக்களின் பங்களிப்பு வரலாற்று குறிப்பாக உள்ளது என்றார்.
எனவே இவ்விவகாரத்தில் நாட்டிற்காக ஓர் இனம் மட்டுமே போராடியிருப்பதாக கூறுவது அவ்வளவு நல்லது அல்ல என்றார் உள்துறை அமைச்சருமான ஜாஹிட். நமது நாட்டில் உள்ள மக்கள், பல்லினத்தை சார்ந்தவர்கள் ஆவர். நம் நாட்டை அழிக்க வெளியிலிருந்து எதிரிகள் நுழையும் சமயம் மலேசிய மக்கள், மலாயா கூட்டரசு அல்லது மலாயா என்ற அடையாளத்துடன் ஒன்றுபட்ட மக்களாக அனைத்து இனத்தவர்களும் போராடியுள்ளனர். இதுதான் நமது அச்சாணியாகும். வரலாறாகும் என்றார்.
Read More: Malaysia Nanban News paper on 17.1.218
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்