புத்ராஜெயா,
மலேசிய குடியுரிமை விண்ணப்பத்திற்கான அங்கீகாரத்திற்காக காத்திருக்கும் சிறார்கள், அரசாங்கப் பள்ளிகளுக்குச் செல்ல உரிமையுண்டு என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார். சம்பந்தப்பட்ட பிள்ளைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வரையில் அந்தப்பிள்ளைகளை அரசாங்கப்பள்ளிகளில் கல்வி அமைச்சு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.
இது போன்ற பிரச்சினைகளை யாரும் எதிர்நோக்கியிருந்தால் தமது அமைச்சின் மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். நேற்று உள்துறை அமைச்சின் மாதாந்திர கூட்டத்திற்கு தலைமையேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
சிரம்பானில் ஏழு வயது சிறுமி டர்ஷனா, ஆவணப்பிரச்சினை காரணமாக பள்ளிக்குச் செல்ல இயலாமல் பள்ளியின் வாசலிலேயே காத்திருக்கும் அவல நிலை தொடர்பாக கருத்துரைக்கையில் ஜாஹிட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Read More: Malaysia nanban News Paper on 12.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்