(எம்.கே.வள்ளுவன்) மாசாய்,
மாசாய் வட்டாரத்தில் சுமார் 80 ஆண்டு காலம் அருள்பாலித்து வந்த ஸ்ரீ சிவ சக்தி ஸ்ரீ சின்ன கருப்பன் ஆலயம் நேற்று உடைத்து தரை மட்ட மாக்கப்பட்டது பக்தர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆலயத்தின் சிலைகள் கண்மூடித்தனமாக தகர்த்தெறியப்படுவதை கண்டு மக்கள் வெகுண்டு எழுந்தனர். நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த ஆலயத்தை தற்காக்க கடந்த சனிக்கிழமை மக்கள் கூடியதைத் தொடர்ந்து ஆலயத்தை உடைப்பதிலிருந்து பின் வாங்கிய நில மேம்பாட்டாளர் நிறு வனம் நேற்று யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆலயத்தை உடைத்து தரைமட்டமாக்கியது.பண்டார் ஸ்ரீ ஹாலாம், ஜாலான் தாசேக் 64 ஐ கடந்து சுமார் அரை கிலோ மீட்டரிலுள்ள லம்சான் செம்பனை தோட்டத்தில் அமைந்திருந்த அந்த அருள்மிகு சிவ சக்தி ஸ்ரீ சின்ன கருப்பன் ஆலயம் ஒரு காலத்தில் சீனர்களின் வழிபாட்டுத் தலமாக இருந்ததாக கூறப்படும் வேளையில் கடந்த 20 ஆண்டுகளாக ஆலயத்தலைவராக மு.மகேந்திரன் பொறுப்பேற்று சேவையாற்றி வந்தார்.
Read More: Malaysia Nanban News paper on 12.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்