(சுகுணா முனியாண்டி) சுங்கை பக்காப்,
எங்களுக்கு புதிய வீடுகளை கட்டி தாருங்கள். இல்லையேல், எங்கள் குடியிருப்புப் பகுதியில் வெள்ள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணுங்கள் என சுங்கை ஜாவி வட்டாரத்தில் உள்ள கம்போங் சேது மக்கள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர். கடந்த இரண்டு தினங்களாக பெய்த தொடர் அடை மழையினால் மோசமாக பாதிக்கப்பட்ட கம்போங் சேது மக்கள், வெள்ளத்தில் தங்களின் உடைமைகளை இழந்து பரிதவிக்கின்றனர்.
அவர்களை காப்பாற்றும் பணிகளில் மலேசிய பாதுகாப்புப் படையினர் களமிறங்கினர். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக இப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு வருகின்றது. ஒவ்வொரு முறையும் வெள்ளம் ஏறிய பின்னர் எங்களுக்கு அனுதாபங்கள் கூற இங்குள்ள சட்ட மன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாநில ஆட்சி குழு உறுப்பினர்களும் வருகின்றனர். உதவிகள் செய்கின்றனர் . ஆனால், அது எங்களுக்கு நிரந்தர தீர்வாகுமா என்று பாதிக்கப் பட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Read More: Malaysia Nanban News Paper on 6.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்