ஜொகூர் பாரு,
நீண்ட காலமாக புற்று நோயால் அவதியுற்று வந்த ஒரு தாய் தன் 10 வயது மகளை கழுத்து நெரித் துக் கொன்றது டன், தானும் தூக்கில் தொங்கி தற்கொலை புரிந்து கொண்ட சம்பவம் ஸ்கூடாய் பகுதி வாழ் மக்களுக்கு மற்றொரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் ஸ்கூடாய், தாமான் ரினியில் பூபாலன் குடும்பத்தில் நால்வர் கொலை, தற்கொலை செய்த சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதற்குள் இப்படி ஒரு சம்பவம் மீண்டும் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது.
ஸ்கூடாய், தாமான் இண்டா ஹைட்ஸ் 2, ஜாலான் கெஇண்டாஹான் 27 என்ற முகவரியில் உள்ள ஒரு வீட்டில் சுமதி ஜெயராமன் என்ற 45 வயது மாது தூக்கில் தொங்கக் காணப்பட்ட அதே சமயம், அவரின் 10 வயது மகள் ஆர்த்தினி கிருஷ்ணகுமார் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். நேற்று முன்தினம் இரவு இச்சம்பவம் நிகழ்ந்ததை ஜொகூர் பாரு வட பகுதி மாவட்ட போலீஸ் துணைத் தலைவர், சூப்ரிண்டென்டன் பே எங் லாய் நேற்று உறுதிப்படுத்தினார்.
Read More: Malaysia Nanban News Paper on 30.12.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்