கோலாலம்பூர்,
தேசிய முன்னணியின் 13 உறுப்புக் கட்சிகள் அடங்கிய சிறப்பு உச்ச மன்றக் கூட்டம் வரும் ஜனவரி 3-ஆம் தேதி நடை பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் 14-ஆவது பொதுத்தேர்தலுக்கான இறுதிக் கட்டப் பணி கள் குறித்தும் இதில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிகவும் முக்கியமாக இக்கூட்டத்தில் தேசிய முன்னணி வேட்பாளர்கள் பட்டியல் உறுதி செய்யப்படும் என்பதுடன் உறுப்புக் கட்சிகளின் தேர்தல் இயந்திரம் பற்றியும் தீர்மானிக்கப்படும். இதனிடையே, அன்றைய தேதியில் சிறப்புக் கூட்டமும் நடைபெறும் என்ற தகவலை தேசிய முன்னணி கட்சித் தலைவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வரும் பிப்ரவரி 16, 17 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படும் சீனப்புத்தாண்டிற்குப் பிறகு நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற ஆரூடங்களுக்கு இது மேலும் வலுவூட்டும் வகையில் உள்ளது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்