(ப.சந்திரசேகர்) ஈப்போ
திருடுபோன எனது கைப்பைக்குள் இருந்த அடையாள கார்டை பயன்படுத்தி அடகு ரசீதைக் கொண்டு அடகு கடையிலிருந்த என் தங்க நகையை மீட்டிருப்பது குறித்து இந்திய மாது பேரா மசீச புகார் பிரிவிடம் முறையிட்டார். கடந்த டிச. 2 ஆம் தேதி சிலிபின் தேவாலயத்தின் முன் காரை நிறுத்தி விட்டு சென்ற பிறகு திரும்ப காருக்கு வந்த போது காரின் கண்ணாடி உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சிக்குள்ளானதாக தேவமணி (வயது 38) கூறி னார். காரின் இருக்கைக்கு அடியில் வைத்திருந்த கைப்பை கொள்ளையடிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து அதே நாளில் போலீசில் புகார் செய்ததாக அவர் கூறினார். கைப்பைக்குள் இருந்த என் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், ரொக்கம் இவற்றோடு அடகு கடை ரசீதும் கொள்ளையிடப்பட்டது. எனது பாரம்பரிய தங்க வளையல் அடகு ரசீது காணாமல் போனதாக இது குறித்து புகார் செய்ய சம்பந்தப்பட்ட அடகு கடைக்கு சென்ற போது அடகு வைத்த தங்கவளையல் மீட்கப்பட்டு விட்டதாக அடகு கடை நிர்வாகம் கூறிய போது அதிர்ச்சிக்குள்ளானேன்.
Read More: Malaysia Nanban News Paper on 19.12.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்