துர்க்கா / சிரம்பான்,
மோட்டார் சைக்கிளில் தனியாக நடமாடிய ஆசாமி ஒரே இரவில் போலி சாவிகளைப் பயன்படுத்தி 7 கடைகளில் புகுந்து பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் வர்த்தகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை 3 மணிக்கு மேல் 6 மணிக்குள் சிரம்பான், ஜாலான் யாம் துவான், ஜாலான் துவாங்கு அசான், ஜாலான் பண்டார் துங்கால் ஆகிய 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள கடைகளின் வாசல் கதவின் பூட்டுகளை உடைக்காமல் பணம் கொள்ளையிடப்பட்டதாக போலீஸ் பேச்சாளர் கூறினார்.
சிரம்பான் நகர் மத்தியில் லிட்டில் இந்தியா என அழைக்கப்படும் இடத்தில் இருக்கும் இறைச்சி கடை, ஜவுளி கடை உட்பட 7 கடைகளில் எந்த வித பதற்றமும் இல்லாமல் முகமூடி அணிந்த நபர் கல்லாவில் வைக்கப்பட்டிருக்கும் பணத்தை மட்டும் எடுத்து செல்வது சிசிடிவியில் பதிவாகி உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
Read More: MALYSIA NANBAN NEWS PAPER on 16.12.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்