கிள்ளான்,
வழக்கம் போல நேற்று காலை 8.00 மணிக்கு, கம்போங் ஜாவா, ஜாலான் டத்தோ செல்லதேவ னில் உள்ள தனது பணியிடம் சென்றடைந்த எஸ்.ஜோதிமணி என்ற பெண், பிறகு காலை 9.40 மணிக்கு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு வெளியே அடையாளம் தெரியாத ஆடவர்களால் கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பட்டப்பகலில் நிகழ்ந்த இச்சம்பவத்தினால் கம்போங் ஜாவா மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். ஜோதிமணி கடத்தப்பட்ட சம்பவம் தொழிற்சா லைக்கு வெளியே உள்ள ரகசிய கேமராவில் மிகவும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இக்காணொளி நேற்று சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் குடும்பத்தாரும் போலீசாரும் அப்பெண்ணையும் கடத்தலில் ஈடுபட்ட அந்த ஆடவர்களை தேடும் படலத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கே.இ.இ. 46 என்ற எண் பட்டையைக் கொண்ட வெள்ளை நிற மெர்சிடிஸ் பென்ஸ் காரில் அவர் கடத்தப்பட்டதாக நேற்று காலை தொடங்கி வாட்ஸ் ஆப்பில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவலுடன் அப்பெண் கடத்தப்பட்ட காணொளியும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Read More: Malaysia Nanban News Paper On 09.12.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்