கோலாலம்பூர்,
இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் மஇகாவின் உதவித் தலைவரான செனட்டர் டத்தோ டி.மோகன், நாடாளுமன்ற மேல வையில் தன் முதல் உரை யாக 2018 -ஆம் வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் பங்கு கொண்டு பேசினார்.இதுவரை எந்த மலேசிய இந்திய செனட்டர்களும் செய்யாத அள விற்கு, முதல் முறையாக மேலவையில் திருக்குறளை மோகன் பயன்படுத்தினார்.
திருவள்ளுவரின் 385-ஆவது குறளான ‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு’ என்பதற்கு ஏற்ப 2018 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் நலமான வாழ்க்கை மேம்பாட்டையும் உறுதிசெய்கிறது என்று மோகன் குறிப்பிட்டார். இது வரை தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கைகளில் இது தலையாய ’தாய்’ பட்ஜட் ஆகும். இது நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்துவதாகவும் மக்களின் அனைத்து தேவைக ளையும் பூர்த்தி செய்வதாகவும் உள்ளது என அவர் கூறினார்.
Read More: Malaysia Nanban News paper on 8.12.2017
நாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார
மேலும்தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12
மேலும்கெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று
மேலும்அண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு
மேலும்1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த
மேலும்