img
img

காதலியை மானபங்கப் படுத்திய ஆடவர் 
புதன் 06 டிசம்பர் 2017 12:41:42

img

கோத்தா பாரு, 

இரு குழந்தைகளுக்கு தந்தையான ஆடவர் 15 வயதுடைய சிறுமியை மானபங்கம் செய்த குற்றத்தை இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்தார். மனைவியின்றி இரு குழந்தைகளுடன் இருக்கும் அந்த ஆடவர் மானபங்கம் செய்த இளம்பெண் அவரின் காதலி என கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட பெண்ணை இவர் இருமுறை மானபங்கம் செய்துள்ளார்.

நீதிபதி அகமட் பாஸில் முன்னிலையில் குற்றப் பத்திரிகை வாசிக்கப்பட்டது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை முகமட் பக்ருல் பஸ்லி (வயது 33) நீதி மன்றத்தில் மறுத்தார்.

கடந்த மார்ச் மாதம் தொடக்கம் அக்டோபர் மாதம் வரையில் இடைப்பட்ட நாளில் பெரிஸ் குபோர் பெசார் எனும் இடத்திலுள்ள வீட்டில் குற்றம் சுமத்தப்பட்ட நபர் இளம்பெண்ணை மானபங்கப் படுத்தியுள்ளார். இரண்டாவது முறை அவ்வாடவர் அந்த இளம்பெண்ணை கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் மானபங்கப் படுத்தியுள்ளார். தற்போது அப்பெண் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த வழக்கின் அடுத்தக் கட்ட விசா ரணை அடுத்தாண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img