(ப.சந்திரசேகர்) ஈப்போ,
வடக்கு-தெற்கு விரைவு நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்று தங்களின் காரின் மேல் மோதியதில் 16 வயது நிரம்பிய ஆர். விஜேந்திர ராவ் மற்றும் 13 வயதான ஆர். ஷங்கர் ராவ் என்ற சகோதரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவ்விருவரின் தாயார் கடுமையான காயங்க ளுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்தில், விஜேந்திர ராவ் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமடைந்து விட்டதாகவும் அவரின் தம்பி ஷங்கர் ராவ் தைப்பிங் மருத்து வம னையில், சிகிச்சை பலனளிக்காமல் இறந்ததாகவும் தைப்பிங் இடைக்கால போலீஸ் படைத் தலைவர் ரஸ்லாம் அப்துல் ஹமீட் கூறினார். அவ்விபத்து ஏற்படும் போது, அவ்விரு பதின்ம வயதினரும், தங்கள் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தனர் என்று அவர் தெரிவித்தார்.
காரை ஓட்டிச் சென்ற அவர்களின் மாற்றாந் தந்தை கே.ஷங்கர் கணேஷுக்கு இவ்விபத்தில் சிராய்ப்பு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்று ரஸ்லாம் சொன்னார். மரணமடைந்த அந்தச் சிறுவர்களின் தாயாரான ஆர்.கோமதிக்கு தைப்பிங் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது
Read More: Malysia Nanban News Paper on 6.12.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்