கோலாலம்பூர்,
அடுத்த ஆண்டு முதல் வேலை இழந்தவர்களுக்கு தொழிலாளர் காப்புறுதி முறையின் கீழ் உடனடி உதவித் தொகையாக மூன்று மாதங்களுக்கு தலா 600 வெள்ளி அலவன்ஸ் தொகை வழங்கப்படும். தொழிலாளர் காப்பு றுதி முறையின் கீழ் வேலை இழந்தவர்கள் இந்த அலவன்ஸ் தொகையை பெறுவதற்கு சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்திற்கு அரசாங்கம் 12 கோடியே 20 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது என்று சொக்சோவின் நிர்வாகத் தலைவர் டத்தோ டாக்டர் முகமட் அஸ்மான் அஸிஸ் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டில் 57,282 பேர் இந்த ரொக்கத் தொகையை மூன்று மாதங்களுக்கு பெறுவார்கள். இதற்காக 10 கோடியே 30 லட்சம் வெள்ளி செலவிடப்படும். சுய விருப்பத்தின் பேரில் (வி.எஸ்.எஸ்.) பணியைவிட்டு விலகும் தொழிலாளர்கள் மற்றும் சேவை குத்தகை முடிந்ததன் காரணமாக வேலையிலிருந்து நிறுத்தப்படுபவர்களும் இந்த அலவன்ஸ் தொகையை பெறுவதற்கு தகுதி பெறுகின்றனர் என்று அவர் சொன்னார்.
Read More: Malaysia Nanban News paper on 6.12.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்