img
img

இந்திய மாது கழுத்து நெரித்து கொலை
சனி 02 டிசம்பர் 2017 16:52:14

img

(ப.சந்திரசேகர்) கம்பார்,

இந்திய மாது ஒருவர் தலையில் காயத்துடன் கழுத்து நெரித்து கொலை செய் யப்பட்ட நிலையில்  கண்டுபிடிக்கப்பட்டார். கம்பார் அருகில் உள்ள மம்பாங் டி அவான், தாமான் பெர்மாயில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் அந்தப் பெண்ணின் சடலம் கிடந்தது. எஸ். லெட்சுமி (வயது 28) என்று அடையாளம் கூறப்பட்ட அந்தப் பெண்ணின் சடலம் நேற்று  பிற்பகல் 2 மணியளவில் செம்பனைத் தோட்டத்தில் கிடப்பதை கண்ட காளான் பறித்துக்கொண்டிருந்த 60 வயது ஆடவர், பின்னர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். கடந்த 24 மணி நேரத்தில்தான் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு இருக்கக்கூடும் என்று கம்பார் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்ட். இங் கோங் சூன் தெரிவித்தார். அந்தப் பெண் கழுத்து நெரிக்கப்பட்ட பின்னர்,  தலைகவசத்தால் தலையிலேயே அடித்து கொல்லப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் நம்புகின்றனர். சவப்பரிசோதனைக்காக அந்தப் பெண்ணின் சடலம் கம்பார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இங் தெரிவித்தார்.

Read More: Malaysia nanban News paper on 2.12.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img