கோலாலம்பூர்,
சிறையில் உள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை விடுவிப்பது மீது விவாதம் நடத்தக் கோரி பாடாங் செராய் கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர் என். சுரேந்திரன் கொண்டு வந்த அவசரத் தீர்மானத்தை நாடாளுமன்றம் நிராகரித்தது. அன்வார் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டதைச் சுட்டிக்காட்டிய மக்களவைத் தலைவர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியா, தீர்மானத்தை நிராகரித்தார். நீதிமன்றத்தில் நியாயமான முறையில் வழக்காடப்பட்டு குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டதாகத்தான் நான் காண்கிறேன்.
சட்டப்படியான உத்தரவின்படி தான் அன்வார் சுங்கை பூலோ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என பண்டிகார் எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளார்.நவம்பர் 6-இல், மனித உரிமைகளுக்கான ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பு, அன்வார் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்ததை அடுத்து, சுரேந்திரன் இந்த அவசரத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
Read More: Malaysia Nanban News paper on 29.11.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்