பெட்டாலிங் ஜெயா,
பேங்க் நெகாரா - கோலா லம்பூர் நிலையங்களுக்கிடையே கடந்த வியாழன் அன்று சரக்கு ரயில் தடம் புரண்டதால் பாதிக்கப்பட்ட ரயில் சேவைகள் நாளை முதல் வழக்க நிலைக்கு திரும்பும் என்று கே.டி.எம்.பி.பெர்ஹாட் பேச்சாளர் ஒருவர் கூறினார்.தண்டவாள பழுது பார்க்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. தற்போதைய வானிலை காரணமாக மேலும் ஒரு நாள் எங்களுக்கு தேவைப்படுகிறது. செவ்வாய்க்கிழமை காலையில் அனைத்து ரயில் சேவைகளும் வழக்கம் போல மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.
கடந்த வியாழன் அன்று 12 பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயில் பேங்க் நெகாரா நிலையம் அருகே தடம் புரண்டது. இதன் காரணமாக, சிகாம்புட், புத்ரா, பேங்க் நெகாரா, கோலாலம்பூர் நிலையங்களுக்கிடையே சேவைகள் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்