கோலாலம்பூர்,
மூத்த அரசு வழக்கறிஞர் டத்தோ அந்தோணி கெவின் மொராய்ஸ் கொலை வழக்கில் பொய் சாட்சியம் அளித்த குற்றத்திற்காக 37 வயது தையல்காரரான எஸ்.யோகேஸ்வரிக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை விதித்தது. முரணான சாட்சியத்தை அளித்ததில் யோகேஸ்வரி மீது தப்பில்லை என்பதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க எதிர்த்தரப்பு வழக்கறிஞர் தவறிவிட்டதால், இந்தத் தண்டனை விதிக்கப்படுகிறது என்று மாஜிஸ்திரேட் நமீரா ஹனூம் தெரிவித்தார்.
அந்தப் பொய்யான வாக்குமூலத்தை அளித்தமைக்காக யோகேஸ்வரிக்கு நீதிமன்றத்தில் 1,500 வெள்ளி அபராதம் செலுத்தப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இருந்தபோதிலும், அந்தத் தீர்ப்பினை மேல்முறையீடு செய்யும் பொருட்டு இந்தத் தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று அவரின் வழக்கறிஞர் ஜெ.ஜெயரூபிணி கேட்டுக் கொண்டதற்கிணங்க, 13,000 வெள்ளி ஜாமின் தொகையில், ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டார்.
Read More:Malaysia Nanban News paper on 25.11.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்