img
img

உப்சியில் பட்டம்பெற்ற 22 தமிழ்மொழி ஆசிரியர்களின் நிலை என்ன?
வியாழன் 23 நவம்பர் 2017 12:40:14

img

(எஸ்.எஸ்.பரதன்)

தஞ்சோங்மாலிம்,

கடந்த 2016 செப்டம்பர் மாதம், உப்சி எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக் கழகத்தில், தமிழ்மொழித் துறையில் பட்டம் பெற்ற 22 ஆசிரியர்களின் நிலை தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது. தமிழ் மொழித் துறையில் இளங்கலைப் பட்டம் பெறுவதற்கு உப்சி பல்கலைக் கழகம் வாய்ப்பளிக்கிறது எனும் அறிவிப்புகளை அறிந்த தமிழார்வமிக்க இந்திய மாணவர்கள் தமிழாசிரியராக வேண்டும் எனும் வேட்கையில் தங்கள் உயர்கல்வியைத் தொடர்ந்துள்ளனர். 

2012/2013ஆம் ஆண்டில் இப்பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியில் உயர் கல்வியைத் தொடர்ந்த 22 மாணவர்கள், கடந்த 2016 ஜூன் மாதத்தில் தங்கள் பட்டப் படிப்பினை நிறைவு செய்துள்ளனர். கடந்த 2016 செப்டம்பர் மாதம் தமிழ்மொழித் துறையில் பட்டப் படிப்பினை முடித்தவர்கள் ஓராண்டாகியும் இன்னும் பள்ளிகளில் நியமனம் செய்யப் படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகவே கருதப்படுகின்றது.

Read More: Malaysia nanban News paper on 23.11.2017

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img