img
img

தந்தை 3 பிள்ளைகள்,தூக்கில் தொங்கினர்
செவ்வாய் 21 நவம்பர் 2017 12:16:20

img

( நா. மணிராஜா) 

சுங்கைப்பட்டாணி,

இந்திய ஆடவர் தனது 3 பிள்ளைகளுடன் தூக்கில் தொங்கி, உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் இந்த வட்டாரத்தை அதிர்ச்சியில் உறையவைத்தது. 48 வயதுடைய அந்த ஆடவரின் மனைவி கடந்த ஜனவரி மாதம் படுக்கையறையில் தூக்கில் தொங்கி உயிரைவிட்டதைத் தொடர்ந்து அடுத்த பத்து மாதங்களில் அக்குடும்பத்தில் மேலும் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்து இருப்பது, உறவினரை  நிலைகுலையச் செய்துள்ளது.

அந்த நால்வரும் இங்கு பெர்டானா ஹைட்ஸில் உள்ள தங்கள் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தது நேற்று பிற்பகலில் தெரியவந்தது.  48 வயதுடைய சிவராவ் த/பெ கிருஷ்ணன், அவரின் இரண்டு மகன்களான  ரகுராவ் (வயது 6), சாஸ்மின்ராவ் (வயது 5), ஒரே மகளான யமுனா (வயது 8) ஆகியோரே இறந்தவர்களாவர் என்று போலீசார் அடையாளம் கூறினர். அந்த நால்வரும் வீட்டின் படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர்.

அதே படுக்கை அறையில்தான் சிவராவின் துணைவியார் காமினி (வயது 38) இவ்வாண்டு  ஜனவரி மாதம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். சிவராவும் அவரின் மூன்று பிள்ளைகளும் இறந்து கிடப்பது பிற்பகல் 2 மணியளவில்தான் தெரியவந்தது. அவர்கள் 12 மணி நேரத்திற்கு முன்பு இறந்து இருக்கக்கூடும் என்று போலீசார் நம்புகின்றனர்.

Read More: Malaysia Nanban News paper on 21.11.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img