வீ செட் எனும் சமூக வலைத்தளத்தில் பழகிய நண்பருடன் வெளியே சென்ற 13 வயது சிறுமி நால்வரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் சம்பந்தப்பட்ட சிறுமி வீ செட்டில் அறிமுகமான நபருடன் வெளியே சென்றுள்ளார். அந்த நபருடன் வந்த சக நண்பர்களும் இவர்களை தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர் கம்போங் மானோங்கிலுள்ள செம்பனை மரத்தோட்டத்திற்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்று நால்வரும் அந்த சிறுமியை கற்பழித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அந்த நபர் 10 நாட்களுக்கு முன்புதான் வீ செட்டில் பழக்கமானார் என கற்பழிக்கப்பட்ட சிறுமி கூறியதாக பத்து பகாட் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் வஹிப் முசா தெரிவித்தார். இந்த கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நால்வரில் இருவரை போலீஸ் கைது செய்துள்ளது. மேலும் இருவரை தேடி வருகிறது. தன் அம்மாவிடம் நண்பர் வீட்டிற்கு படிக்கச் செல்வதாக கூறிவிட்டு அச்சிறுமி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அச்சிறுமியை அழைத்துச் சென்ற நபரும் சக நண்பர்களும் அச்சிறுமியை மாறி மாறி கற்பழித்துள்ளனர் என்ற தகவல் அச்சிறுமியை விசாரித்ததன் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு பல ஆண்களுடன் உடல் உறவு கொண்டுள்ளதாகவும் அச்சிறுமி விசாரணையில் ஒப்புக் கொண்டதாக அப்துல் வாஹிப் தெரிவித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்