கோலாலம்பூர், நவ. 17-
வங்கியின் ஒப்புதல் இன்றி மூன்றாம் தரப்பினருக்கு தங்கள் கார்களைக் குத்தகைக்கு விடும் உரிமையாளர்கள் மீது அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார். கடனைத் திருப்பி செலுத்துவதற்காக, மூன்றாம் நபருக்கு குத்தகைக்கு விட்டு பணம் சம்பாதிப்பது,வாடகை கொள்முதல் சட்டம் 1967 ஐ மீறுவது ஆகும் என்று ஜாஹிட் கூறினார்.
வங்கிக் கடனைத் தொடர்ந்து செலுத்துவதற்காக, கார்களை குத்தகைக்கு கொடுப்பது உண்மையில் உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் அமைச்சின் அதிகாரத்தின் கீழ் வாடகை கொள்முதல் சட்ட கோட்பாடுகளை மீறுவது ஆகும் என்று அவர் நேற்று நாடாளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாகப் பதிலளித்தார்.
வங்கிக் கடனைத் தொடர்ந்து செலுத்தும் திட்டங்களில் ஏற்படும் மோசடிகளை விளக்குமாறு லிம் லிப் எங் (ஜ.செ.க. சிகாம்புட்) கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். வங்கிக் கடன் ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும்போது, ஓர் உரிமையாளர் தன் காரை விற்பனை செய்வது, உரிமையாளர் கொள்முதல் சட்டம் 1967, செக்ஷனின் இன் கீழ் வெ.30,000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறைவாசம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.
Read More: Malaysia Nanban News Paper on 17.11.207
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்