பினாங்கு,
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளந்தான் மாநில மக்களுக்கு தலா 500 வெள்ளி நிவாரண நிதியை மத்திய அரசாங்கம் வழங்கும் போது, பினாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவ்வாறு வழங்க மறுப்பது ஏன் என்று மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் கேள்வி எழுப்பியுள்ளார். அது தொடர்பாக புத்ராஜெயா விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பினாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை கருணையோடு பரிசீலனை செய்து அத்தகைய நிதியை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வழங்க வேண்டும் என்று லிம் குவான் எங் கேட்டுக்கொண்டார்.
பினாங்கில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பில் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி பினாங்கு, செபராங் பிறைக்கு வருகை புரிந்த பிரதமர் நஜீப், மக்கள் படும் துயரத்தை நேரடியாக பார்வையிட்டு சென்றுள்ளார் என்று நேற்று பினாங்கு சட்டமன்றத்தில் மாநிலத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் லிம் இவ்வாறு தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil News Paper on 15.11.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்