கோலாலம்பூர்,
இப்போதிலிருந்து 180 நாட்களில் நாட்டின் 14-ஆவது பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி நேற்று அறிவித்தார்.பொதுத்தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதால் கட்சிக்காக எந்தெந்த தலைவர்கள் கடுமையாக உழைக் கின்றனர் என்பது எனக்கு தெரியும். இப்போதிருந்து எண்ணி 180 நாட்களில் தேர்தல் நடைபெறும் என்று தேசிய முன்னணி பங்காளி கட்சிகளின் தலைவர்களிடம் அவர் தெரிவித்தார்.
180 நாட்களுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்படும் என்று கூறுபவர் கள் உண்மை நிலையில் வாழ்பவர்கள் இல்லை என்று அவர் கருத்துரைத்தார். இங்குள்ள கெராக்கான் தலைமையகத்தில் நேற்று அக்கட்சியின் 46-ஆவது தேசியப் பேரவையை அவர் தொடக்கி வைத்துப் பேசினார்.கெராக்கான் தேசியத் தலைவர் மா சியூ கியோங், அம்னோ, ம.இ.கா., ம.சீ.ச. உள்ளிட்ட தேசிய முன்னணி பங்காளி கட்சிகளின் தலைவர்களும் அதில் கலந்து கொண்டனர்.
Read More: Malaysia nanban News Paper on 13.11.2017
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்